tag:blogger.com,1999:blog-359700332024-03-14T03:05:05.446-05:00பிள்ளைத்தமிழ்வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி!<br>
ராஜாதி ராஜனுக்கு இதமான லாலி!!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-35970033.post-3969343235730847392007-06-05T21:00:00.000-05:002013-10-10T20:16:12.668-05:00குருத்தோலைப் பெட்டி செஞ்சி...காதலன் படத் தாலாட்டு!இதை வைத்துக் கொண்டு குழந்தைக்கும் விளையாட்டு காட்டலாம். காதலியையும் அசர வைக்கலாம். அதை எல்லாம் அனுபவஸ்தர்கள் அறிவார்கள்!<br />
எப்பிடிப்பா? எப்பிடிப்பா??<br />
அட, சும்மா நம்ம குருத்தோலையை வச்சிக்கினு தாம்பா!<br />
போ....போயி <strong>குருத்தோலை</strong> உரிச்சிக்கினு வா...செஞ்சி காட்டறேன்!<br />
<br />
அடப் பாவி...மாதா பிதா குரு தெய்வம்!<br />
அப்பேர்பட்ட "குரு" தோலைப் போயி உரிச்சிக்கினு வரச் சொல்லுறியே! - இது உனக்கே அநியாயமாத் தெரியல?<br />
<br />
டேய், குருத்தோலைன்னு பனை மர ஓலையை உரிக்கச் சொன்னாக்கா...நீ ரொம்பத் தான் ஷோக்கு காட்டறியா! இன்னா விஷயம்?<br />
சரி..சரி...இந்தக் குழந்தை ரொம்ப அழுவுது பாரு! இந்த ஓலையை நறுக்கி ஒரு குச்சிக் காத்தாடி செய்யி....வைச்சு விளையாட்டுக் காட்டலாம்!<br />
<br />
ஊருக்குப் போயிருந்த போது, நண்பரின் நாலு வயது மகனுக்குப் போக்கு காட்டிக் கொண்டு இருந்தேன்!<br />
கிராமத்தில் கொஞ்ச நாளாச்சும் இருந்தவர்க்கு, இந்தக் குருத்தோலை அப்படி ஒரு பழக்கம். அத வைச்சி பல பொருட்கள் செய்யலாம்! பெட்டி, விசிறி, தோரணம், குடிக்கும் ஏணம் (கப்), குடை, குச்சிக் காத்தாடி... இன்னும் நிறைய.<br />
<br />
குருத்தோலையைத் தான் தோரணம்-னு மாவிலையோடு கட்டுகிறோம், பண்டிகை நாட்களில்!<br />
குருத்தோலை ஞாயிறுன்னு பள்ளியில் கொண்டாடிய நினைவுகள்!<br />
எல்லாரும் குருத்தோலை பிடித்துக் கொண்டு பின்னே வர, அவர்களுக்கு முன்னே நான் ஃபாதர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க,<br />
"ஓசானா பாடுவோம்", ன்னு பாடிக்கொண்டே சென்ற ஞாபகம்! ஆனா முடிக்கும் போது, கள்ளத்தனமா...சன்னமா...ஓம் முருகா-ன்னு சொல்லி, டப்புன்னு முடிச்சிடுவேன்! :-)<br />
<hr style="font-size: 0px;" />
<br />
<strong>ரொம்ப நாள் கழிச்சு, இந்தப் பிள்ளைத் தமிழ் பதிவு பக்கம் எட்டிப் பார்க்கிறேன்! </strong>இப்பல்லாம், ஆபீசில் ஆணி புடிங்கிட்டு, மீதி இருக்குற நேரத்தில...<br />
தமிழைப் பார்ப்பதா, இல்லை பிள்ளைத்தமிழைப் பார்ப்பதா - நீங்களே சொல்லுங்க!<br />
<br />
ஒரு அருமையான நாட்டுப்புறப் பாட்டு - தாலாட்டு பாட்டு கிடைத்தது.<br />
<strong>அதுவும் பிள்ளைத் தமிழ் தானே! நாட்டுப்புறப் பிள்ளைத் தமிழ்! </strong><br />
<br />
<strong>காதலன் திரைப்படத்தில், </strong><br />
இதன் முதல் சில வரிகளைப் பிரபுதேவா பாடுற மாதிரி ஒரு காட்சி! இனிமையான தாலாட்டு வரிகள்!<br />
(அவரு யாரைத் தாலாட்டுகிறார்-ன்னு விவகாரமான கேள்வி எல்லாம் கேக்கக் கூடாது சொல்லிப்புட்டேன்...சரீய்ய்ய்ய் யாருப்பா அது? நம்ம சோதிகா அக்கா தானே! :-)<br />
<br />
<strong><span style="color: #6600cc;">கொல்லை யிலே தென்னை வச்சி, குருத்தோலைப் பெட்டி செஞ்சி<br />சீனி போட்டுத் நீ திங்க, செல்லமாய்ப் பிறந்தவளோ!<br />மரக்கிளையில் தொட்டில் கட்ட, மாமனவன் மெட்டு கட்ட<br />அரண்மனைய விட்டு வந்த, அல்லி ராணி கண்ணுறங்கு...</span></strong><br />
<div align="center">
<embed height="350" src="http://www.youtube.com/v/bSJMV0ZceGo" type="application/x-shockwave-flash" width="425" wmode="transparent"></embed></div>
<br />
<a href="http://www.musicindiaonline.com/p/x/9UxgnadWqd.As1NMvHdW/" target="new">ஒலிச்சுட்டி இதோ</a><br />
<br />
ஆனா, இது ஒரு முழு நீள நாட்டுப் பாடல்! அருமையான தாலாட்டு!<br />
வீல் வீல் என்று அழும் குழந்தைகளுக்கு, மருந்து ஊத்தித் தூங்க வைக்கும் கலி காலம் இது!<br />
டாக்டர் தேவைப்பட்டா கொடுக்கச் சொன்னாருன்னு சமாதானம் வேற!<br />
கேட்டா colic baby depressant ன்னு நல்லாவே இங்கிலிபிஷ்ல பேசறாங்க!<br />
<br />
ஆனா நம்மூருல எதப்பா ஊத்தித் தூங்க வைச்சாங்க?<br />
<strong>தமிழையும் பாட்டையும் அல்லவா தாலாட்டுப் பாலாடையில் ஊற்றித் தந்தார்கள்!</strong><br />
இந்த மாதிரிப் பாடக் கூட வேணாம், அப்படியே கொஞ்சம் ஹம் பண்ணாலே போதும், கொஞ்சும் பிஞ்சுகள் தூங்கிடாதா என்ன?<br />
நாமும் கூடவே சேர்ந்தே தூங்கிப் போயிடுவோமே!<br />
எங்க....................கூடவே, வாய் விட்டு, பாட்டு படிங்க பார்ப்போம்!<br />
<hr style="font-size: 0px;" />
<br />
<div align="center">
<a href="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/RmYXbzXCtiI/AAAAAAAAAIU/Ui4ZUTO5xZQ/s1600-h/img_9106_redimensionner.jpg"><img alt="" border="0" id="BLOGGER_PHOTO_ID_5072767796690204194" src="http://2.bp.blogspot.com/_e2k9ic_4a9g/RmYXbzXCtiI/AAAAAAAAAIU/Ui4ZUTO5xZQ/s320/img_9106_redimensionner.jpg" style="cursor: hand; display: block; margin: 0px auto 10px; text-align: center;" /></a></div>
<u><span style="font-size: 85%;"><strong>(செல்லமாய்ப் பிறந்தவனோ....)</strong></span></u><span style="color: #006600;">கொல்லையிலே தென்னை வச்சி, குருத்தோலை பெட்டி செஞ்சி<br />சீனி போட்டு நீ திங்க, செல்லமாய்ப் பிறந்தவனோ!<br />பட்டெடுத்து தொட்டில் கட்ட, பசும் பொன்னால் பொட்டுரைக்க<br />ஆட்டிடுங்க தாதியரே - என் அன்னக்கிளி கண்ணயர! </span><br />
<strong><span style="font-size: 85%;"><u></u></span></strong><br />
<strong><span style="font-size: 85%;"><u>(செட்டியார் வளையல் மாட்ட வராரு...) </u></span></strong><span style="color: #660000;">வாருமய்யா வளையல் செட்டி, வந்திறங்கும் பந்தலிலே!<br />கோல வளையல் தொடும், குணத்துக்கொரு வளையல் தொடும்!<br />நீல வளையல் தொடும், நிறத்துக்கொரு பச்சை தொடும்!<br />அள்ளிப் பணம் கொடுத்து, அனுப்பி வைப்பார் உங்களப்பா!<strong> </strong></span><span style="color: #660000;"><br />-----------------------------------------------------------------------------</span><br />
<span style="color: #660000;"><br /></span><span style="color: #660000;"></span><strong><u><span style="font-size: 85%;"></span></u></strong>
<strong><u><span style="font-size: 85%;">(பெருமாளு தான், காப்பு இருக்க வேணும்)</span> </u></strong><span style="color: #6600cc;">கல்லெடுத்து கனி சொறிஞ்சு, கம்சனையே மார் வகுத்து<br />ஓலம் செய்யும் மாயனவன், ஒலகளந்த பெருமாளோ!<br />பச்சை முடி மன்னவரோ? பவழ முடி இராவணனின்<br />அச்ச மெல்லாம் தீர்க்க வந்த ஆதி நாராயணரோ?</span><br />
<strong></strong><br />
<strong><span style="font-size: 85%;"><u>(மாமன் கொண்டாந்த சீதனம்...) </u></span></strong><span style="color: #009900;">பால் குடிக்கக் கிண்ணி, பழம் திங்க சேனோடு<br />நெய் குடிக்கக் கிண்ணி, நிலம் பார்க்கக் கண்ணாடி<br />கொண்டைக்குக் குப்பி, கொண்டு வந்தார் தாய்மாமன்.<br />கல்லெடுத்து உங்க மாமன், காளியோட வாதாடி,<br />வில்லெடுத்து படை திரட்டும் வீமன் மருமகனோ?<br />-----------------------------------------------------------------------------</span><br />
<strong><u><span style="font-size: 85%;"></span></u></strong><br />
<strong><u><span style="font-size: 85%;"><br /><br />(ஓங்க அப்பாருக்கு காஞ்சிபுரத்து எண்ணெய் ஒத்துக்காதாம், மவனே!...)</span> </u></strong><span style="color: #660000;">காஞ்சிவரத் தெண்ணைய், கண்ணே கரிக்குதுன்னு<br />தெங்காசி எண்ணெய்க்கு, உங்கப்பா சீட்டெழுதி விட்டாக!<br />வாசலிலே வண்ணமரம், உங்கப்பா வம்சமே இராச குலம்<br />இராச குலம் பெற்றெடுத்த ரதமணியே கண்ணசரு!</span><br /><br /><strong><span style="font-size: 85%;"><u>(அட, இப்படியும் பால் காய்ச்சுவாங்களா, என்ன?....பூனை, புலி, ஆனைப் பால்) </u></span></strong><span style="color: #3333ff;">பூனைப் பால் பீச்சி, புலிப்பாலில் உறையூத்தி<br />ஆனைப்பால் காயுதில்ல, உங்கப்பா அதிகாரி வாசலிலே!<br />வெள்ளிமுழுகி என் கண்ணே, உன்னை வெகுநாள் தவசிருந்து<br />சனிமுழுகி நோம்பு இருந்து, நீ தவம்பெற்று வந்தவனோ!</span>----------------------------------------------------------------------------- <br />
<br /><strong><u><span style="font-size: 85%;">(கண்ணுறங்கு கண்ணுறங்கு)</span></u><br /><span style="color: #006600;">கண்ணுறங்கு கண்ணுறங்கு மாயவனே கண்ணுறங்கு </span></strong><br /><strong><span style="color: #006600;">கண்ணுறங்கு கண்ணுறங்கு மகிழம்பூ கண்ணுறங்கு</span></strong><br /><strong><span style="color: #006600;">கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்மணியே கண்ணுறங்கு<br />கண்ணுறங்கு கண்ணுறங்கு பொன்மணியே கண்ணுறங்கு</span></strong> <br />
<hr size="0" />
<br />பாட்டுக்கு விளக்கம் வேறு வேணுமா என்ன! :-)<br />கொல்லையிலே தென்னை வச்சி, குருத்தோலைப் பெட்டி செஞ்சி<br />- அந்த இண்டு இடுக்குப் பெட்டியில்...<br />ஆலையில் இருந்து கொட்டிய நாட்டுச் சக்கரை, சீனியைப் போட்டு, தின்று கொண்டே இருக்கலாம்!<br /><strong>- யாராச்சும் நெசமாலுமே குருத்தோலைப் பெட்டி செஞ்சிருக்கீங்களா?</strong> :-)<br />
Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-35970033.post-1165702001826590882006-12-09T16:57:00.000-05:002007-02-03T22:43:15.660-05:0020 மாதக் குழந்தை வாசிக்கும் வாத்தியம்!என்ன?<br />இருபது மாதக் குழந்தை வாத்தியம் வாசிக்குதா? அதுவும் ஸ்டைலா!!<br />Detroit-இல் உள்ள 20 மாதக் குழந்தை, <a href="http://www.youtube.com/watch?v=ST0WCLx1WbM" target="new"><strong>சியாமா கிருஷ்ணா</strong></a>!<br /><br />அது வாசிக்கும் கொள்ளை அழகை நீங்களே பாருங்க! <br />அதுவும் காட்சியின் இறுதியில், ஜாகீர் உசேன் ஸ்டைலில் தலையை ஆட்டி, கச்சேரியை முடிக்கிறது! :-) அதை மிஸ் பண்ணாம பாருங்க!!<br /><br /><p align=left><object height="350" width="425"><param name="movie" value="http://www.youtube.com/v/Es39S9VCZm4"><embed src="http://www.youtube.com/v/Es39S9VCZm4" type="application/x-shockwave-flash" width="425" height="350"></embed></object></p><br /><br />யார் என்று தெரியாவிடினும்,<br />குழந்தைக்கும், பெற்றோர்க்கும், வாழ்த்துக்கள்!<br />Budding Talent என்பார்கள்!<br /><strong>வளரட்டும்; இசை மிளிரட்டும்!!</strong>Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com31tag:blogger.com,1999:blog-35970033.post-1164836683390753152006-11-29T16:40:00.000-05:002006-12-09T20:32:35.426-05:00அலுவலகத்தில் தாலாட்டு பாடலாமா?அலுவலகத்தில் என்ன சிந்தனை தெரியுமா? இப்ப என் குழந்தை என்ன பண்ணிக்கிட்டு இருப்பான்?....<br />தத்தித் தத்தி ஓடுகிறானா இல்லை காப்பாளருக்குத் தொல்லை தராமல் தூங்குகிறானா?<br />காலையில் வழக்கம் போல் சாப்பிடாமல் துப்பி விட்டானே! மதியமாச்சும் ஒழுங்காச் சாப்பிட்டானா? ஒரு வேளை புதுப் பல்லு முளைக்குதோ?<br />மற்ற பிள்ளைகளோடு குஷியா விளையாடுறானா இல்லை வம்பு இழுக்கிறானா?<br /><br />ச்சே என்ன இன்னிக்கு இவன் ஞாபகமாகவே இருக்கு!<br />முக்கியமான இ-மெயிலில் அட்டாச்மெண்ட் வைக்கமாலேயே மேலாண்மை இயக்குனருக்கும் மற்ற இயக்குனர்களுக்கும் அனுப்பி விட்டேனே! ச்சே! இப்ப இன்னொரு இ-மெயிலில் அசடு வழியணும்!<br /><strong>அந்த அட்டாச்மெண்டால் இந்த அட்டாச்மெண்டை கோட்டை விட்டோமோ?</strong>:-)<br /><br /><strong>மாலை 5:00 மணி! CTRL+ALT+DEL</strong><br />அவசரமாய் நண்பன் ஒருவன் என் அறைக்கு வர, "மச்சோ (மச்சியின் ஐரிஷ் ஆக்கம்), have to go now! see u tomorrow!!", என்று அடித்துப் பிடித்துக் கிளம்பி...<br /><br /><span style="color:#3333ff;"><strong><span style="color:#009900;">அமெரிக்காவில் பிறந்த என் அற்புதமே!<br /><span style="color:#990000;">ஐந்துமணிக்கு மேல் நான் உனக்கு அர்ப்பணமே!!</span><br /><span style="color:#330099;">அவசரமாய்த் தான் வர நினைத்திருந்தேன் அஞ்சுகமே! - அதற்குள்</span><br /></span><span style="color:#cc0000;">அடிக்கடி சிக்னல் விழுந்ததால், கொஞ்சம் தாமதமே!!<br /></span></strong></span><br />என்ன ஒரே கவிதையா இருக்குன்னு பாக்கறீங்களா?<br />நம் பத்மா அரவிந்த் அவர்கள் தேன் துளியில், "ரவி, சுப்ரபாதம் வேகமாக போவது போல பிள்ளைத்தமிழ் இன்னும் வளரவில்லை போல் தெரிகிறதே" என்று ஆர்வத்தை அழகாத் தூண்டி விட்டுட்டார்!<br />"பிள்ளை"த்தமிழ் தானே! அதான்......தத்தித் தத்தி.......இதோ அடுத்த பதிவு!<br /><br /><strong>இது இலக்கியப் பிள்ளைத்தமிழா? இல்லை<br />அமெரிக்கா வாழ் தமிழர்களின் பிள்ளைத்தமிழா? <br /></strong>பெற்றோர் பணி முடித்து வரும் வழியிலேயே குழந்தைக்குப் பாடும் தாலாட்டு!<br />நீங்களே பாருங்கள் ஒளி-ஒலிக் கவிதையை! (Please allow buffering time on slow PCs; A 7 min video)<br /><br /><object height="326" width="400"><param name="VideoPlayback" value="http://video.google.com/googleplayer.swf?docId=2556925844350539722&hl=en"><param name="wmode" value="transparent"><br /><embed style="width:400px; height:326px;" id="VideoPlayback" type="application/x-shockwave-flash" src="http://video.google.com/googleplayer.swf?docId=2556925844350539722&hl=en" flashvars=""> </embed><br /></object><br /><br />மேலே கண்டது, இதயப் பூக்கள் என்னும் ஆல்பத்தில்,<br />New York அருள் வீரப்பன் அவர்கள் பாட்டாய் எழுதி,<br />முகுந்த் என்கிற Mux, லக்ஷணா இருவரும் பாடியது! <a href="http://www.cdbaby.com/cd/mukund" target="new">இதோ அவர்கள் சுட்டி</a><br />சான் பிரான்சிஸ்கோ Bay Areaவில் இந்தியர்களிடையே பிரபலமான இந்திய இசைக்குழு! அனைவரும் <a href="http://www.blogswara.in/" target="new">Blogswara</a> வலைத் தளத்தில் சிறப்பு சேர்ப்பவர்கள்!<br />இசைத்தமிழ்ப் பணி செய்பவர்களுக்கு அடியேனின் பாராட்டுக்கள்!<br /><br />என்ன நண்பர்களே! பார்த்து மகிழ்ந்தீர்களா?<br /><strong>மாலை 5:00 மணி ஆச்சே! இன்னும் கிளம்பலையா வீட்டுக்கு?:-))</strong>Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com58tag:blogger.com,1999:blog-35970033.post-1164584307207921592006-11-26T09:00:00.000-05:002006-12-04T01:10:28.636-05:00அன்னை மீனாட்சிக்கு ஒரு தாலேலோ!!மதுரை என்ற சொன்ன அடுத்த நிமிடம் எல்லாருக்கும் உடனே நினைவுக்கு வருவது எது?<br />ஆண்-பெண், சாதி-மதம், நாடு-மொழி, ஆத்திகம்-நாத்திகம் என்று எல்லாத்துக்கும் அப்பாற்பட்டு உடனே மனதில் தோன்றுவது எது?<br />ஒளிக்காமல், மறைக்காமல் சொல்லுங்க பார்ப்போம்!..ஆங்! அதே!<br /><strong><span style="color:#009900;">மீனாட்சி!!!</span></strong><br /><br />அது எப்படி அம்மா இது?<br />ஊரைச் சொன்ன மாத்திரத்தில் அனைவர் உள்ளங்களிலும் சிக்கென்று நிறைந்து விடுகிறாய்?<br />இதே சென்னை, திருச்சி என்று பெரிய பெரிய ஊர்களைச் சொன்னால் எல்லாருக்கும் கபாலியோ இல்லை அரங்கனோ மனதில் வருவது இல்லை!<br />ஒரே விதிவிலக்கு திருப்பதி! அங்கும் பேரைச் சொன்னாலே போதும் வேங்கடவன் வந்து விடுகிறான்; இப்படி அண்ணனும் தங்கையும் இந்த வித்தையை எங்கிருந்து தான் கற்றுக் கொண்டீர்களோ? :-)<br /><br />சரி, இப்போ மதுரைக்குச் சற்று வெளியில் உள்ள ஒரு பெரிய குளத்துக்குப் போகலாம் வாங்க! <strong>வண்டியூர் மாரியம்மன் குளம்</strong>!<br />கூட்டாஞ்சோறு சாப்பிட இதை விட ஒரு நல்ல இடம் கிடைக்குமா? மரங்கள் சூழ்ந்து, சிலு சிலு என்று பசுமையான குளம்!<br />குளத்தில் தண்ணியே இல்லை! ஒரே பாலா இருக்கு! ஆவின் பால்!!<br />பசுங்குளம், வெள்ளைக்குளமா மாறிடுச்சா?? இது என்ன ஏதாச்சும் கண்கட்டு வித்தையா?<br /><strong>குமரகுருபரர்</strong> என்ற செந்தமிழ்க் கவிஞர் செய்யும் வித்தை இது! எதுக்கு? குழந்தை மீனாளை/அன்னை மீனாளைத் தூங்க வைக்க! பார்க்கலாம் வாங்க!<br /><br /><p><a href="http://photos1.blogger.com/x/blogger/5133/1750/640/924877/teppakulam.jpg"><img style="DISPLAY: block; WIDTH: 247px; CURSOR: hand; HEIGHT: 167px; TEXT-ALIGN: center" height="161" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/5133/1750/320/223941/teppakulam.jpg" width="248" border="0" /></a><br /><span style="color:#009900;"><strong>தென்னன் தமிழின் உடன்பிறந்த <br />சிறுகால் அரும்பத் தீஅரும்பும்<br />தேமா நிழற்கண் துஞ்சும்இளஞ் <br />செங்கண் கயவாய்ப் புனிற்றுஎருமை</strong></span><br /><br />நம்ம தமிழும், தென்றல் காற்றும் உடன் பிறப்புக்கள். இரண்டும் ஒரே தெற்குத் திசை மலை - பொதிகை மலையில் தான் தோன்றின!<br />அகத்தியர் மலை அல்லவா அது! தெற்கில் இருந்து வீசுவதால் தானே தென்றல்ன்னு பேரு! <u>சிறுகால் = தென்றல்</u>; குட்டிப் பாப்பாவின் சிறு கால் போல தென்றல் தத்தித் தத்தி வீசுகிறதே!<br /><br />இப்படித் தென்றல் வீச, குளக்கரை மாமரங்களின் மேல் தீ ஜ்வாலை பற்றி எரிகிறது! அடச் சும்மாங்க! மாந்தளிர் சிவந்து இருப்பதால், காற்றில் பறபற என்று ஆடிஆடித், தீ அரும்புவது போல் உள்ளதாம்!<br /><br />அந்த மர நிழலில் ஒரு மாடு தூங்குகிறது; எருமை மாடு;<br />இந்தக் காலத்தில் தான் எருமை என்றால் நாமெல்லாம், அதுவும் பட்டிணத்துக்காரங்க, ஒரு மாதிரியா பார்க்கிறோம்! ஆனா அதுவும் பால் தரும் ஜீவன் தானே! சிவந்த கண், பெரிய வாய், இப்போது தான் கன்னு போட்ட (புனிற்று) ஒரு தாய் எருமை!<br /><br /><strong><span style="color:#990000;">இன்னம் பசும்புல் கறிக்கல்லா <br />இளங்கன்றுஉள்ளி மடித்தலம் நின்று<br />இழிபால் அருவி உவட்டுஎறிய <br />எறியும் திரைத்தீம் புனல்பொய்கைப்</span></strong><br /><br />இன்னும் பச்சைப் புல்லைக் கூடக் கடிக்க முடியாமல் உள்ள பச்சிளங் கன்றைப் பார்த்தவுடன், அம்மா எருமைக்கு ஒரே பாசம்.<br />தானாகவே பால் மடியில் இருந்து சுரக்கிறது. இந்தக் குட்டி என் வயிற்றில் வந்து பிறந்து, சாப்பிடக் கூடத் தெரியாமல் இருக்குதே என்ற ஏக்கம், பாலாகத் தானாய்ச் சுரக்கிறது!<br />சுப்ரபாதப் பதிவிலும் இதைப் பார்த்தோம். அன்னையிடம் நாமெல்லாம் போவதற்கு முன்பே, நமக்கு என்ன தரலாம் என்று தாயாய் அருள் சுரக்கின்றாள்!<br /><br />இப்படிப் பால் வழிந்து அருவி போல ஓடுகிறது!<br />பொய்கையில் (குளம்) உள்ள தண்ணீர் அலைகள் இந்தப் புது பால் அருவியோடு மோதுகின்றன!<br />பாலும் நீரும் மோதி மோதிக், கடைசியில் குளம் முழுக்க பால்! பாற்கடலோ, பாற்குளமோ என்று நிறைந்து விடுகிறது! </p><p><strong><span style="color:#009900;">பொன்னம் கமலப் பசுந்தோட்டுப் <br />பொன்தாதுஆடிக் கற்றை நிலாப்<br />பொழியும் தரங்கம் பொறைஉயிர்த்த <br />பொன்போல் தொடுதோல்அடிப் பொலன்சூட்டு</span></strong><br /><br />இந்தப் பாற்குளத்தில் பொன் போல் சிவந்த கமலம் (தாமாரை) பூத்துள்ளது. அதன் இதழில், மகரந்தத் தாதுக்கள் பொடியாய் கண் சிமிட்டுகின்றன;<br />மேல் இருந்து பார்க்கிறான் சந்திரன். தன் பங்குக்கு மேலும் வெள்ளைக் கதிர்களை வீசுகிறான். Everything is white! நம்ம டிஸ்னி ட்ரீம்லேண்ட் போல!<br />இதனால் உண்டான அலையில், ஒரு வெள்ளை அன்னம், நீந்திச் செல்கிறது!<br /><span style="font-size:85%;">(தொடுதோல் அடி=அன்னத்தின் காலில் தோலும் ஒட்டி இருக்கும்; பொலன் சூட்டு=உச்சியில் கொண்டை; கவிஞர் இயற்கையை ரொம்பவே கவனிச்சு எழுதியிருப்பார் போல; காதலிலும் சரி, தாலாட்டிலும் சரி, கற்பனை பிச்சிக்கிட்டுப் போவது ஏனோ :-) </span><br /><br /></p><a href="http://photos1.blogger.com/x/blogger/5133/1750/640/614899/meenakshi.jpg"><img style="DISPLAY: block; WIDTH: 248px; CURSOR: hand; HEIGHT: 314px; TEXT-ALIGN: center" height="305" alt="" src="http://photos1.blogger.com/x/blogger/5133/1750/320/199938/meenakshi.jpg" width="232" border="0" /></a><br /><strong><span style="color:#009900;">அன்னம் பொலியும் தமிழ்மதுரைக்கு <br />அரசே தாலோ தாலேலோ<br />அருள்சூல் கொண்ட அங்கயற்கண் <br />அமுதே தாலோ தாலேலோ</span></strong><br /><br />அன்னம் பொலியும் தமிழ் வளர்த்த மதுரை! அதை ஆள வந்த பெண்ணரசே, தாலே தாலேலோ! <strong>அங்கயற்கண்ணி </strong>= அம் கயல் கண்ணி; அழகிய கயல்மீன் கண்ணைக் கொண்டவளே! (<span style="font-size:85%;"><strong>மீனாக்ஷி</strong> = மீன+அக்ஷி = மீன்+கண்</span>)<br />நீயே ஒரு குழந்தை; சூல்=கர்ப்பம்; குழந்தை சூல் கொள்ளுமா?<br /><br />ஊரில் குழந்தையைக் கொஞ்சும் போது "என்னைப் பெத்த ராசா" என்று சொல்வார்கள்; குழந்தை எப்படி இவர்களைப் பெக்கும்? அதே தான் இதுவும்!!<br />உன்னைப் பெத்ததால் என் பிறவிக்கே ஒரு பொருள் வந்தது!<br />உன்னைப் பெற்றதால் என்னை நானே பெற்றவன் ஆனேன்!<br />அதனால் நீ "என்னைப் பெத்த ராசா"!!<br /><br />அது போல் அன்பையும் அருளையும் சூல் கொண்டவளே!<br />என் அமுதமே மீனாட்சீ! <strong>என்னைப் பெற்ற தாயே</strong>!<br /><strong>தாலே தாலேலோ</strong>!!<br /><br /><span style="font-size:85%;">(மேற்கண்ட பாடலை நீலாம்பரியில் இசைத்துப் பாடலாம்; கண்கள் தானாகவே சொக்கும்; </span><br /><span style="font-size:85%;">இது குமரகுருபரர் பாடிய மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்; </span><br /><span style="font-size:85%;">பிறவியில் வாய் பேச முடியாமல் பிறந்த அவர், பின்னர் திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் திறம் பெற்றார். பேசும் திறம் மட்டுமா பெற்றார்? </span><br /><span style="font-size:85%;">நம்மை எல்லாம் பாட்டால் கட்டி, </span><br /><span style="font-size:85%;">நம்மைக் கட்டிக் காப்பவளையும் அல்லவா பாட்டால் கட்டும் திறம் பெற்றார்!)</span><br /><br />எல்லாம் சரி! <u>எதுக்குக் கடவுளைக் குழந்தை ஆக்கணும்? அதற்குப் பிள்ளைப் பாடல் பாடணும்??</u><br />ஜடாயு ஐயா அவர்கள் இந்தக் கேள்வி எழுப்பி உள்ளார், சென்ற பின்னூட்டத்தில்! ஆழமான அழகிய கேள்வி!! அடுத்த பதிவில் பார்ப்போம்!<br /><strong>ஆனா அதுக்கு முன்னாடி நம்ம "மருத"காரங்களுக்கு ஒரு கேள்வி! அன்னை மீனாட்சி பிறந்த ஊர் எது தெரியுமா?....</strong>Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com59tag:blogger.com,1999:blog-35970033.post-1163466479591647122006-11-13T20:07:00.000-05:002006-11-26T20:26:57.950-05:00செந்தமிழா? பிள்ளைத்தமிழா??செந்தமிழ் தெரியும்! அது என்ன பிள்ளைத்தமிழ்?<br />பிள்ளை போல் என்றும் இளமையாக இருப்பதால், தமிழ் மொழிக்கு இன்னொரு பேர், பிள்ளைத் தமிழா? இருக்கலாம்! :-)<br /><br />கடவுளையோ அல்லது புகழ் பெற்ற மனிதரையோ குழந்தையாகப் பாவித்து(உருவகித்து) பாடப்படுவது "<strong>பிள்ளைத்தமிழ் </strong>என்று இலக்கியத்தில் அழைக்கிறார்கள்.<br /><br />ஆண் குழந்தை, பெண் குழந்தை என்ற விருப்பு வெறுப்பு எல்லாம் தமிழுக்கும் கிடையாது! இறைவனுக்கும் கிடையாது!!<br />எந்தக் குழந்தை என்றாலும் சரி! நம்<br />சொந்தக் குழந்தை என்றாலும் சரி;<br />பிள்ளைத்தமிழ் பாடிக் கொள்ளலாம்! :-)<br /><br />நாட்டுப்புறத்தில் "ஆராரோ, ஆரரிரோ, ஆர்அடிச்சு நீ அழுத" என்று பாடுவதற்குப் பிள்ளைத்தமிழ் என்று பெயர் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்! ஆனால் சுவையைப் பொறுத்த மட்டில் அதுவும் பிள்ளைத்தமிழ் தானே!!<br /><br />பின்னாளில் இதை சிற்றிலக்கிய வகையில் சேர்த்தார்கள்! <strong>அது ஏன் சிற்றிலக்கியம்</strong>? தெரியவில்லை!<br />ஒரு வேளை காவியம் போல் பெரிதாக இல்லாமல், அளவில் சிறிதாக இருப்பதால் இருக்கலாம்; "சிற்றின்பம்" தானே முதலில் சுவையுள்ளதாகத் தெரிகிறது! சிற்றிலக்கியமும் அப்படியே இருக்கட்டும்! :-)<br /><br />குழந்தை வளர்வதைப் <strong>பத்து பருவங்களாகப்</strong> பிரித்து ஒவ்வொரு பருவத்துக்கும் ஒவ்வொரு பெயர், ஒவ்வொரு விளையாட்டு! கடைசிப் பருவங்களில் மட்டும் விளையாட்டுகள் சற்றே வேறுபடும்; ஆண் குழந்தைகள் சிறுபறை கொட்டினால், பெண் குழந்தைகள் அம்மானை விளையாடும்!<br /><br />பல கவிஞர்கள் அப்போதும் சரி, இந்தக் காலத்திலும் சரி, பிள்ளைத்தமிழைப் பாடியுள்ளார்கள்! அண்மையில் யாரோ பிபாஷா பாசுவுக்குப் பாடப் போவதாக எங்கோ வலையில் படித்த ஞாபகம் :-)<br />ஆனால் <strong>பலர் போற்றிக் கொண்டாடுவது</strong> இவை தான்:<br /><br />1) மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர் எழுதியது<br />2) திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் - பகழிக் கூத்தர்<br />3) சேக்கிழார் பிள்ளைத்தமிழ் - மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை<br /><br /><strong>ஆனா இங்க ஒரு முக்கியமான விடயத்தைக் கவனிக்கனும்! </strong><br />வடமொழியில் சுப்ரபாதம் என்ற ஒன்று உண்டு என்றால் தமிழில் திருப்பள்ளி எழுச்சி் என்ற ஒன்று உண்டு.<br />ஆனா, பாருங்க!<br />இந்தப் <strong>பிள்ளைத்தமிழ்</strong> என்பது <strong>தமிழில் தான் பெரும்பாலும்</strong> வழக்கில் உள்ளது! வடமொழியில் சில சுலோகங்கள் வேண்டுமானால் இருக்கலாம்; ஆனால் கவிதை அமைப்பாக இல்லை என்று தான் நினைக்கிறேன்!<br /><br />இதன் முழுப்பெருமை யாரைச் சாரும் தெரியுமா?<br /><strong>பெரியாழ்வார் </strong>தான் அவர்!<br /><strong>தாலாட்டைக் கவிதையாக்கிய தமிழ்ச் சான்றோர்</strong> அவர்!<br />அவருக்கு முற்காலத்தில், இப்படிக் குழந்தை செய்யும் குறும்புகளை ரசித்து அனுபவிக்கும் கவிதைகள் அவ்வளவாக இல்லை! திருக்குறளில் கூட ஒரு அதிகாரம் மட்டுமே!<br /><br /><table align="center"><tbody><tr><td><br /><a href="http://photos1.blogger.com/blogger/5133/1750/640/17krish.jpg"><img style="DISPLAY: block; WIDTH: 209px; CURSOR: hand; HEIGHT: 254px; TEXT-ALIGN: center" height="247" alt="" src="http://photos1.blogger.com/blogger/5133/1750/320/17krish.jpg" width="200" border="0" /></a><br /></td><td><br /><a href="http://photos1.blogger.com/blogger/5133/1750/640/young_krishna_PY09_l.jpg"><img style="DISPLAY: block; WIDTH: 198px; CURSOR: hand; HEIGHT: 279px; TEXT-ALIGN: center" height="285" alt="" src="http://photos1.blogger.com/blogger/5133/1750/320/young_krishna_PY09_l.jpg" width="192" border="0" /></a><br /></td></tr></tbody></table><br />ஆனால் பெரியாழ்வார் ஒரு "புதுக்"கவிதை எழுதுகிறார் பாருங்கள்!<br />யசோதையாக தன்னைக் கற்பனை பண்ணிக் கொள்கிறார்;<br />கண்ணனின் குறும்புகள் எல்லாத்தையும் கண்டு களிக்க நமக்கு வழிவகை செய்கிறார். தாயான ஒரு பெண் கூட இப்படி லயித்து, அனுபவித்துக் குழந்தை வளர்க்க முடியுமா என்பது கேள்வியே!<br /><br />தாலாட்டு, அம்புலி (நிலாச்சோறு),<br />சப்பாணி (கை கொட்டல்), பூச்சி காட்டுதல் <span style="font-size:78%;">(அட அப்பவே இது இருந்திருக்கு போல)</span>,<br />நீராட்டல், பூச்சூட்டல், மைபூசிக் காப்பிடல் என்று கிட்டத்தட்ட 200 கவிதைகள்;<br />இதோ சாம்பிளுக்கு ஒன்று! <span style="font-size:78%;">(இவர் பாடல்களுக்குக் கடைசியில் வருவோம்...)<br /><br /></span><span style="font-size:78%;"></span><span style="color:#3333ff;">மாணிக்கம் கட்டி மணிவைரம் இடைகட்டி<br />ஆணிப்பொன்னால் செய்த வண்ணச் சிறுத்தொட்டில்<br />பேணி உனக்குப் பிரமன்விடு தந்தான்<br />மாணிக் குறளனே தாலேலோ<br />வையம் அளந்தானே தாலேலோ<br /><br /></span>இதுல வேடிக்கை என்னவென்றால், பிள்ளைத்தமிழ் கவிதை முறையைத் தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். ஆனால் அவருடைய கவிதைகளே, பிள்ளைத்தமிழில் சேர்க்கப்படவில்லை!<br />அட நம்ம "வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி" பாட்டும், "அத்தை மடி மெத்தையடி" பாட்டும் பிள்ளைத்தமிழ் இல்லை தான்; அதுக்காக நாம பாடாமல் விட்டுடுவமா என்ன? :-))<br /><br />அடுத்த பதிவில்,<br />குமரகுருபரர் எழுதிய <strong>மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்</strong>-இல் இருந்து ஒரு அருமையான பாடலைப் பார்ப்போம்!<br />சூரியனுக்கே டார்ச்லைட்டா? மதுரைக்கே மல்லிப்பூவா??<br /><strong>தாலாட்டு பாடும் அன்னைக்கே தாலாட்டா?? :-))</strong><br />அன்னை மீனாளுக்கே அழகுத் தமிழா? நடக்கட்டும்! நடக்கட்டும்!!Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com25tag:blogger.com,1999:blog-35970033.post-1163456706188245262006-11-13T17:24:00.000-05:002006-11-19T03:11:02.533-05:00முதல் வணக்கம்!முதல் பிள்ளை! முதல் வணக்கம்!!<br /><p><a href="http://photos1.blogger.com/blogger/5133/1750/640/baby_ganesha_MA03_l.jpg"><img style="DISPLAY: block; CURSOR: hand; TEXT-ALIGN: center" alt="" src="http://photos1.blogger.com/blogger/5133/1750/320/baby_ganesha_MA03_l.1.jpg" border="0" /></a><br /><br />முதல் பிள்ளை, <strong>என்றென்றும் நம் குட்டிப் பிள்ளையான கணபதியானுக்கு</strong> <strong>முதல் முத்தம் </strong>(வணக்கம்) சொல்லித் தொடங்குகிறேன்! :-)<br /><br /><strong>இன்று நவம்பர் 14 - குழந்தைகள் தினம்!</strong><br />குழந்தை அழுது கொண்டே தான் பிறக்கிறது; என்றாலும் வளரும் போது சில சமயம், சில வினாடிகள், நாம் குழந்தையைத் தேடும் படி ஆகி விடுகிறதே;<br />அப்போது நாம் தானே அழுது விடுகிறோம்! கலங்கிப் போய் விடுகிறோம்!!<br />மழலைச் "செல்வம்" என்று சும்மாவா சொன்னார்கள்?<br /><br /><span style="color:#000099;">குழல் இனிதா, யாழ் இனிதா.....<br />குழந்தைக் குரல் இனிதா...........இல்லை அதன்<br />எச்சில் விரல் இனிதா??<br /></span><br />இட்டும் தொட்டும், கவ்வியும், நெய்யுடை உணவை மெய்ப்பட விதிர்த்தும்,<br />சிறு கை நீட்டிக் குறுகுறு நடந்தும்.......வடிக்க, வார்த்தைகள் தான் வந்திடுமோ?<br /><br />இந்தப் வலைப்பூவில் <strong>பிள்ளைத்தமிழ் பாடல்கள்</strong> பலவற்றைச், சுவைக்கலாம் என்பது எண்ணம்! தேனினும் இனிய தீந்தமிழில், பலாச்சுளைப் பாப்பாவின் பாடல்கள் என்றால் சும்மாவா?<br />வழக்கம் போல் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டித் துவங்குகிறேன்! </p>Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-35970033.post-1163456638455608032006-11-13T17:21:00.000-05:002007-06-05T21:31:30.894-05:00முன்னுரைநண்பர்களே!<br />தமிழ்மணம் linkஐத் தவறுதலாக எடுத்துக் கொண்டது!<br />இதோ, இது தான் இப்போது பதிப்பித்த பதிவு!<br /><a href="http://pillaitamil.blogspot.com/2007/06/blog-post.html">நாட்டுப்புறத் தாலாட்டு: கொல்லையிலே தென்னை வச்சி, குருத்தோலைப் பெட்டி செஞ்சி...</a><br /><br />பிள்ளைத் தமிழ் வலைப்பூ பல நாட்களாக இருந்தும், <br />இதன் முதல் இடுகையைத் தமிழ்மணம் இப்போது எடுத்துக் கொண்டது ஏனோ! :-)<br /><br /><hr size=0><br /><br />காப்பு!<br />விநாயக வணக்கம்!!<br /><br />இந்தப் வலைப்பூவில் <strong>பிள்ளைத்தமிழ் பாடல்கள்</strong> பலவற்றைச், சுவைக்கலாம் என்பது எண்ணம்!<br />தேனினும் இனிய தீந்தமிழில், பலாச்சுளைப் பாப்பாவின் பாடல்கள் என்றால் சும்மாவா?<br />உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டித் துவங்குகிறேன்! <p></p>Kannabiran, Ravi Shankar (KRS)http://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.com9