Monday, November 13, 2006

முதல் வணக்கம்!

முதல் பிள்ளை! முதல் வணக்கம்!!



முதல் பிள்ளை, என்றென்றும் நம் குட்டிப் பிள்ளையான கணபதியானுக்கு முதல் முத்தம் (வணக்கம்) சொல்லித் தொடங்குகிறேன்! :-)

இன்று நவம்பர் 14 - குழந்தைகள் தினம்!
குழந்தை அழுது கொண்டே தான் பிறக்கிறது; என்றாலும் வளரும் போது சில சமயம், சில வினாடிகள், நாம் குழந்தையைத் தேடும் படி ஆகி விடுகிறதே;
அப்போது நாம் தானே அழுது விடுகிறோம்! கலங்கிப் போய் விடுகிறோம்!!
மழலைச் "செல்வம்" என்று சும்மாவா சொன்னார்கள்?

குழல் இனிதா, யாழ் இனிதா.....
குழந்தைக் குரல் இனிதா...........இல்லை அதன்
எச்சில் விரல் இனிதா??

இட்டும் தொட்டும், கவ்வியும், நெய்யுடை உணவை மெய்ப்பட விதிர்த்தும்,
சிறு கை நீட்டிக் குறுகுறு நடந்தும்.......வடிக்க, வார்த்தைகள் தான் வந்திடுமோ?

இந்தப் வலைப்பூவில் பிள்ளைத்தமிழ் பாடல்கள் பலவற்றைச், சுவைக்கலாம் என்பது எண்ணம்! தேனினும் இனிய தீந்தமிழில், பலாச்சுளைப் பாப்பாவின் பாடல்கள் என்றால் சும்மாவா?
வழக்கம் போல் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டித் துவங்குகிறேன்!

6 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

முதல் வணக்கத்திற்கு என் முதல் பின்னுட்டம்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

திராச ஐயா
வாங்க!
நம்ம கெமிஸ்ட்ரி பாத்தீங்களா?
மாதவிப் பந்தலிலும் நீங்க தான் முதல் பின்னூட்டம்; இங்கேயும் அப்படியே!
என்றும் வேண்டும் தங்கள் இன்ப அன்பு!

தமிழ்மணத்திலும், தேன்கூட்டிலும் தொடுப்புகள் கொடுத்துள்ளேன்; இன்னும் அவர்கள் publish செய்யவில்லை போலும்!
அலுவலகத்தில் வேறு தமிழ்மணத்தின் முன்பக்கம் திடீர் என்று மக்கர் பண்ணுது! Help Deskஐ கூப்பிட வேண்டும்!

குமரன் (Kumaran) said...

முதல் வணக்கத்திற்கு என் இரண்டாவது பின்னூட்டம். :-) (முதல் பின்னூட்டம் எங்கேன்னு கேக்கறீங்களா? போட்டேனே. வரலியா?)

Kannabiran, Ravi Shankar (KRS) said...

// குமரன் (Kumaran) said...
முதல் பின்னூட்டம் எங்கேன்னு கேக்கறீங்களா? போட்டேனே. வரலியா?)//

வரலியே குமரன்; உங்க பின்னூட்டத்தைப் போய் மிஸ் பண்ணலாமா? அதுவும் $100 என்று பாலாஜி அதற்கு மதிப்பு வைத்துள்ளாரே :-) I am going to report in lost and found :-))

தமிழ்மணப் php scriptகளை எங்க பிராக்சி சர்வர் ஸ்வாகா செய்கிறது இன்று! ஆட்களிடம் பேசியுள்ளேன்!! பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் என்று!

குமரன் (Kumaran) said...

$100 ஆ? எல்லார் பின்னூட்டத்துக்குமா? இல்லை என் பின்னூட்டத்திற்கு மட்டும் தானா? விரைவில் சொல்லுங்கள். வருமானம் வரும் வழி என்று சரி போனால் போகட்டும் பதிவும் பின்னூட்டங்களும் எழுதுங்கள் என்று விட்டுவிடுவார்கள் வீட்டில். :-)

Anonymous said...

Vakkundam Nalla Manamundam
enru thuvangum vinayakanai thuthi
seithu aarambikkum ellame
nallapadiyakathan mukiriathu.
Lord Vinayaka Bless you.
All the Best.
Sury
Chennai

  © Blogger template 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP